உண்மை சரிபார்ப்பு: மாற்றியமைக்கப்பட்ட வேலு நாச்சியார் உருவப்படம், விஜய் எம்.ஜி.ஆரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்தார் என்ற உரை தொடர்பாக பரப்பப்படுகிறது

சமூக வலைதள பயனர், மாற்றியமைக்கப்பட்ட வேலு நாச்சியாரின் உருவப்படத்தை பயன்படுத்தி, விஜய் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளன்று மாலை அணிவித்ததாக கூறி பகிர்ந்து வருகின்றனர்.

Update: 2025-01-24 10:12 GMT

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மருதூர் கோபால மேனன் இராமசாமி (எ) எம்.ஜி.ஆர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பெறும் தலைவர். அவர்களது 108ஆவது பிறந்த நாளில் ஜனவரி 17,2025 அன்று மலர்மாலை வணக்கங்கள் செலுத்தப்பட்டன.

எம்.ஜி.ஆர் அவர்கள் நடிகராக அறிமுகமாகி அரசியல் தலைவராக தன்னை உயர்த்திக்கொண்ட அவர் 1972ஆம் ஆண்டு தனது அரசியல் கட்சியான அதிமுகவை தொடங்கினார். அவரது பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி நினைவுக்கூர்ந்தார். “ஏழ்மையை ஒழித்து மக்களை வலுப்படுத்தவும் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் எங்களை மிகவும் ஈர்க்கின்றன," என பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பதிவில்
எழுதினார்
.
இதற்கிடையில், தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சித்தலைவர் விஜய், அதிமுக நிறுவனர், மறைந்த தலைவர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கின்றார் என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் படம் பெரிய அரசியல் கருத்தை வெளிப்படுத்துவதாக பரப்பப்பட்டு வருகிறது.

ஒரு பயனர் X (முன்பு ட்விட்டர்) தளத்தில் விஜயின் புகைப்படத்துடன், "எடிட் னு நினச்சேன் உண்மையாவே பண்ணிருக்கான். ஆகப்பெரும் அரசியல் தற்குறி யா இருக்காரே அண்ணா" என பதிவிட்டார்.

இந்த பதிவு வைரலாகி 85.3K பார்வைகள் மற்றும் 1Kக்கு மேற்பட்ட லைக்களை பெற்றுள்ளது.

இங்கே வைரல் பதிவின் இணைப்பு மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட இணைப்பு:



உண்மை சரிபார்ப்பு:

தெலுங்குபோஸ்ட் உண்மை சரிபார்ப்பு குழு, இந்நிலையில் வெகுவாக பதிவில் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை தவறானது என்பதை கண்டு அறிந்து தெளிவுப்படுத்தியுள்ளது.

இணைய வழித் தேடலில் சீரமைக்கப்பட்ட கேள்விகள், குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி தேடியபோது பல கட்டுரைகளை இருந்தன. அதில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் மலர்மாலை வணக்கங்கள் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டில் எம்.ஜி.ஆரின் சேவைகளை நினைவுகூர்ந்து, அ.இ.அதிமுக நிறுவனரை புகழ்ந்து பேசிய ஒரு பழைய வீடியோவை வெளியிட்டு இருந்தார். New Indian Express பத்திரிக்கை கட்டுரையில் பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தியதாக கூறியுள்ளது. விஜய் தனது ட்வீட்டில், "எம்.ஜி.ஆர் மிகுந்த வறுமையைக் கடந்தார் மற்றும் தமிழக அரசியலில் மையப் பகுதியை அடைந்தார். எம்.ஜி.ஆர் ஒரு அரசியல் ஆச்சரியமாக உருவாகினார், அவர் இறந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்கிறார்" என்று எழுதியுள்ளார்.

த.வெ.க தலைவரின் சமூக ஊடகப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மலர்மாலை வணக்கங்கள் செலுத்தியதாக எந்த படமும் காணப்படவில்லை.
X தளத்தில், பரப்பப்பட்ட புகைப்படம் ஒன்றைப் போல தோன்றும் மற்றொரு பதிவினை கண்டறிந்தோம். அப்பதிவினில் படத்தில் உள்ள பெண் தலைமை, இந்தியாவின் முதல் சுதந்திரப் போராளியான இராணி வேலு நாச்சியார் என்பது தெரிய வந்தது. விஜய், 1857 எழுச்சிக்கு முன்பே பிரிட்டிஷ் காலனி ஆதிகத்துக்கு எதிராக போராட்டத்தை தொடங்கிய வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.
ஆய்வின் முடிவு: த.வெ.க தலைவர் விஜய், எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கவில்லை. தான் கட்சியினை தொடங்கியபோது, தனது கட்சியின் வழிகாட்டியும் மற்றும் போராட்ட நாயகியாகவும் விளங்கும் இராணி வேலு நாச்சியார் அவர்களுக்கு தான் மரியாதை செலுத்தியுள்ளார். எனவே, தற்போது பரவும் விஜய் அவர்கள் பற்றிய செய்தி தவறானது.
Claim :  விஜய் அ.இ.அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்தார்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News