தமிழ்நாட்டில் விற்கப்படும் தர்பூசணியில் எந்த நிறச்சாயமும் இல்லை என அரசுத் தகவல்!
தமிழ்நாட்டு தர்பூசணியில் நிறச்சாய இரசாயனம் சேர்க்கப்படுவதாக பரவும் செய்தியை அரசு நீதிமன்றத்தில் மறுத்துள்ளது.

Claim :
தமிழ்நாட்டு தர்பூசணியில் நிறச்சாய இரசாயனம் சேர்க்கப்படுகிறது.Fact :
தமிழ்நாட்டில் விற்கப்படும் தர்பூசணியில் எந்தவித நிறச்சாயமும் சேர்க்கப்படுவதில்லை என அரசு தகவல்.
கோடை காலம் வந்தாலே பழங்களின் வசீகரிக்கும் மணம், சுவை, தோற்றத்தின் பக்கம் மக்கள் திரும்பிவிடுவர். அதில் முக்கிய இடம் வகிக்கிறது தர்பூசணிப் பழங்கள். விலை மலிவாகவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து ஆறுதல் தரவும் தர்பூசணிகள் உதவுகின்றன. இந்த நேரத்தில் தர்பூசணிப் பழங்களில் நிறச்சாயம் சேர்க்கப்படுவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகின.
தமிழ் இந்து செய்தித் தளத்தில், ‘இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.கேசவன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அரசுத் தரப்பில், ‘தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் எங்கும் தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக பொதுமக்களிடம் நேர்மறையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’ என அரசு தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.